சுகதுக்கம்
ரோஜாவில்
முள்ளை உணருவதைவிட,
முள்ளின் மத்தியில்
ரோஜாவை காணக் கற்றுக்கொள்
காலணியில்லாமை குறித்து
கவலைப்படுவதைவிட,
காலேயில்லாதவனைக் கண்டு
திருப்தியுறக் கற்றுக் கொள்
ஏனெனில்,
சுகமொரு பக்கம்
துக்கமொரு பக்கம் என
இணைந்ததே
வாழ்க்கை நாணயம்.
இவ்வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி. மாற்றுத்திறன் சாதனையாளர்களின் சாதனைகளை மேலும் அறிந்து கொள்ள இவ்வலைப்பூவின் இணைப்பில் உள்ள மற்ற வலைப்பூக்களை பார்க்கவும். . . . .
Saturday, February 14, 2009
தேடல் வேட்கை
தேவைகளின் தேடலில்
ஒவ்வொரு நாளும்
புதிதாய் முளைக்கும்
மற்றொரு தேவை !
தேடலிம்போது
தேவைகள் மாறுபடும்.
எனினும், நீண்டு வளரும்
முடிவிலாச் சங்கிலியாய் !
விற்பதும், வாங்குவதுமாய்
தொடரும் வணிகத்தில்
காலம், அனுபவம்
இரண்டுமே பயன்படு பொருள்கள்
இருப்பதை இழந்து,
இல்லாததைப் பெற்று என
எப்போதும், எதையேனும்
தேடிக் கொண்டே
நாம் !
தேவைகளின் தேடலில்
ஒவ்வொரு நாளும்
புதிதாய் முளைக்கும்
மற்றொரு தேவை !
தேடலிம்போது
தேவைகள் மாறுபடும்.
எனினும், நீண்டு வளரும்
முடிவிலாச் சங்கிலியாய் !
விற்பதும், வாங்குவதுமாய்
தொடரும் வணிகத்தில்
காலம், அனுபவம்
இரண்டுமே பயன்படு பொருள்கள்
இருப்பதை இழந்து,
இல்லாததைப் பெற்று என
எப்போதும், எதையேனும்
தேடிக் கொண்டே
நாம் !
முகமறியாப் பொழுது...
நிழல்களை நேசிக்கும்
மனிதர்களுக்கு மத்தியில்
நிஜத்தை யாசிக்கும்
தொலைபேசித் தேவதையாய்
பரிச்சயமானாய் நீ
அந்தக்கணத்தில்
என் வாழ்வின்
அர்த்தத்தை தரிசித்த
நெகிழ்வு என்னுள்!
பிரபஞ்சத்தின்
சகல் எல்லைகளும்
நம் வார்த்தை விநியோகங்களில்
பரிமாறாப்பட்டன.
பலவேளைகளில்
வார்த்தைகள் தீர்ந்து போனபின்
மெல்லிய மெளனங்களும்
துணைகளாயின.
ஒரு
அந்திப் பொழுதில்
நீ விரும்பியபடி
நம் சந்திப்பும் நிகழ்ந்தது.
உன் விழிகளில்
அதிர்வின் பூகம்பம்.
அன்றோடு அறுப்பட்டது
நம் நட்பு.
எனதான
உடல் ஊனத்தை
உற்று நோக்கிய
உன் விழிகளுக்கு
புலப்படாமல் போனதெப்படி
ஊனப்படாத
என் உணர்வு.
நிழல்களை நேசிக்கும்
மனிதர்களுக்கு மத்தியில்
நிஜத்தை யாசிக்கும்
தொலைபேசித் தேவதையாய்
பரிச்சயமானாய் நீ
அந்தக்கணத்தில்
என் வாழ்வின்
அர்த்தத்தை தரிசித்த
நெகிழ்வு என்னுள்!
பிரபஞ்சத்தின்
சகல் எல்லைகளும்
நம் வார்த்தை விநியோகங்களில்
பரிமாறாப்பட்டன.
பலவேளைகளில்
வார்த்தைகள் தீர்ந்து போனபின்
மெல்லிய மெளனங்களும்
துணைகளாயின.
ஒரு
அந்திப் பொழுதில்
நீ விரும்பியபடி
நம் சந்திப்பும் நிகழ்ந்தது.
உன் விழிகளில்
அதிர்வின் பூகம்பம்.
அன்றோடு அறுப்பட்டது
நம் நட்பு.
எனதான
உடல் ஊனத்தை
உற்று நோக்கிய
உன் விழிகளுக்கு
புலப்படாமல் போனதெப்படி
ஊனப்படாத
என் உணர்வு.
பொய்முகம் களைய...
ஓரடிவைக்க
ஒருயுகமாய்த் தோன்றும்.
இடையூறுகளை ஏற்க
இதயம் தருமாறும்.
கனவுகளை தள்ளீப்போட
ஆசையாய் மனம்
பரபரக்கும்.
நிஜங்களை
நினைக்காமலிருக்க
திரையரங்குகளை மனம் நாடும்.
தினம் தினம்
பொய்முகம் போர்த்தி,
இலட்சியத்தை இடைநிறுத்தி என
எண்ணற்ற குறைகள்
என்னுள்ளிருந்தாலும்,
என்னையும் கூட
ஒரு நல்ல முன்னோடியென
வைத்தியங்கும் ஓருலகம்.
என்பொருட்டு இயலாதெனினும்,
அவர்களுக்காகவேணும்
களைய வேண்டும்
என் குறைகளை !
ஓரடிவைக்க
ஒருயுகமாய்த் தோன்றும்.
இடையூறுகளை ஏற்க
இதயம் தருமாறும்.
கனவுகளை தள்ளீப்போட
ஆசையாய் மனம்
பரபரக்கும்.
நிஜங்களை
நினைக்காமலிருக்க
திரையரங்குகளை மனம் நாடும்.
தினம் தினம்
பொய்முகம் போர்த்தி,
இலட்சியத்தை இடைநிறுத்தி என
எண்ணற்ற குறைகள்
என்னுள்ளிருந்தாலும்,
என்னையும் கூட
ஒரு நல்ல முன்னோடியென
வைத்தியங்கும் ஓருலகம்.
என்பொருட்டு இயலாதெனினும்,
அவர்களுக்காகவேணும்
களைய வேண்டும்
என் குறைகளை !
Subscribe to:
Posts (Atom)