skip to main |
skip to sidebar
வானம் வசப்படும்வாழ்வின்நெடும் பயணத்தில்,பயண வழியெங்கும்சாதனைச் சுவடுகளையும்,சந்தோஷ ரோஜாக்களையும்பதியனிட,விடாமுயற்சிஎனும் அஸ்திரத்தைஅழகாய் எய்யப்பழகு.அதன்பின் வானம் வசப்படும்.
மௌனத்தின் மதிப்பீடு !என் குரலின்மடிப்புகளில் உள்ள்மௌனங்களினூடேஒளிந்திருக்கின்றனஉன்மீதான மதிப்பீடுகள்என்மௌனங்களைவலிந்து பற்றிவருடிக் கொடுத்து,நாய்க்குட்டியென பழக்கிமதிப்பீடுகளின் அகமுகம்அறியமுயல்கிறாய்ஆதலினால்,இப்போதெல்லாம்உன்னைக் கண்டதும்அச்ச அவஸ்தையில்வார்த்தைக் குவியல்களைவாரியிறைத்துவிட்டுஓடியொளிகின்றனஎன் மௌனங்கள் !
சாபங்களும் - வரங்களும் !
வாழ்க்கைசாபங்களை மட்டுமல்ல,வரங்களையும் கூடகொண்டு வருகிறது.ஒரு நிகழ்வின்பாதிபலன் வரமாகவும்,மீதி சாபமாகவும்நம்முன் பகிரப்பட்டிருக்கிறது.சாபங்களின்சரிவை உணர்ந்துவரங்களின்வல்லமையை கக்கொள்ளுதலேவாழத்தெரிந்தவனின்அடையாளச் சுவடு !
தேடல்நமக்கானவாழ்வின் பாதைகளில்எதையோ தேட,கைகளில் தட்டுப்படுகிறதுஏதேனும் ஒன்று'தேடியது அதுதானா ?'எனும் வினாவெழுந்தாலும்கிடைப்பனவற்றையும்விடுவதில்லை.எனினும்,நம் தேடல்நீண்டு வளரும்முடிவிலா சங்கிலியாய் !
கடைசி நாள்வரப்புகள் பிரிப்பதில்தொடங்கின பூசல்வாழ்க்கையின்கடைசி நாள் வரைக்கும்தீர்ந்த பாடில்லை.பக்கத்து வீடுதான்எனினும்,பலகாதத் தொலைவுமனங்களுக்குள்.நெற்றியில் முடிச்சுவிழ,கண்களைச் சுருக்கிபார்த்தஏளனங்கலந்தஅருவெறுப்புப் பார்வைகளின்பிடியிலிருந்து இன்னமும்மீள மறுக்குது மனசு.எனினும்,என் சுயகௌரவத்தின்செவிகளில் வேகத்தோடுபளீரென்றறைகிறதுபக்கத்து வீட்டுமரண ஓலம் !
குறையொன்றுமில்லை !
உடலில்ஊனமிருந்தாலும்,உதிரச் சொந்தங்கள்ஊக்கப்படுத்த,நல்ல தோழமைகள்தோளிணைய,வாசித்த நூல்கள்சுவாசத்தில் கலந்துதன்னம்பிக்கை நல்க,மனசின் வலிமைமகத்துவங்கள் நிகழ்த்த,குறையொன்றுமில்லைஎன் நெஞ்சுக்குள் !