ஓயாப் பெருங்குரல்
கடந்து போகும்
காலவெளியினில்
கால்பட்டு இடறுகின்றன
மனித எலும்புகள்
வர்க்க பேதங்கள்
மறைந்து போய்
வர்ணாசிரமம்
தொலைந்து போய்
எலும்புகளே மீதமாய்
சிதறிக்கிடக்கிறது வாழ்க்கை
உன்முகம், என்முகம்
என்பதெல்லாம் சிதைந்து
புழுதிபடிந்ததொரு
நன்னாளில்
உயிர்த்தெழுகிறது
உள்மனத்திலிருந்து
ஓங்கியொலிக்கும்
காலவெளியின்
ஓயாப் பெருங்குரல்.
ஏகலைவன்