Saturday, April 27, 2013


கவிஞர் ஏகலைவன் அவர்களின் “குறையொன்றுமில்லை” நூல் குறித்து சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் வாழ்த்து மடல்

அன்பு நண்பர் கவிஞர் ஏகலைவன் அவர்களுக்கு

இனிய வணக்கம்

தங்களுடைய சிந்தனைத் தொழிலகத்தின் புதிய படைப்பாகிய “குறையொன்றுமில்லை…” என்னும் வாழ்வியல் சிந்தனை தேரோட்டத்தின் ஊர்வலத்தில் சிறிது நேரம் வாசிப்பு உலா போனேன். அருமையான சிந்தனைத் துளிகளைத் தொகுத்தி சிகரம் தொடும் வழிகளை நடைமுறை சாத்தியத்தோடு கொடுத்துள்ளீர்கள்.

தாங்கள் சிந்திக்க எடுத்துக் கொண்ட தலைப்புகளாகிய “கல்விக்குக் கை கொடுப்போம்”, “சக உயிர்களை நேசிப்போம்”, “வாழ்ந்து பார்க்கலாம்”, “சிக்கனத்தில் உள்ள சுகம்” போன்றவை என்னை சிந்தனைக் கடலில் மூழ்கடித்து தெளிவு முத்துக்களை அள்ளித் தெளித்தன! பாராட்டுக்கள்!!

தொடர்ந்து சிந்தித்து இன்னும் நிறைய படைப்புகளைத் தருக! படைப்புலகம் மகிழட்டும்! வரும் தலைமுறை வாழ்ந்து சிறக்கட்டும்…!

அன்புடன்

சிந்தனைக் கவிஞர்
Dr. கவிதாசன் M.A., M.A., M.A., B.L., Ph.D.,
இயக்குனர்
ரூட்ஸ் நிறுவனங்கள்



Tuesday, April 9, 2013

உதவிக்கரம் மாத இதழில் வெளிவரும் கவிஞர் ஏகலைவனின் வித்தியாசமாய் சில விமர்சனங்கள் - 16







Friday, April 5, 2013



நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

குறையொன்றுமில்லை…
வாழ்வியல் சிந்தனைத் தேரோட்டம்

சுயமுன்னேற்றக் கட்டுரைத் தொகுப்பு
கவிஞர் ஏகலைவன்

ISBN – 978-81-924351-9-0
120 பக்கங்கள்
விலை ரூ. 60 / -

பறக்கத் துடிக்கும் பறவைக்கு வானம் கூட தொட்டுவிடும் தூரம்தான் என்பதை இளைய சமுதாயத்துக்கு உணர்த்தும் நம்பிக்கை நட்சத்திரம் கவிஞர் ஏகலைவன் அவர்களின் சிறப்பான வாழ்வியல் சிந்தனைகளின் தொகுப்பு இந்நூல்.

செயலே சிறந்த சொல் என்பதை நிரூபித்து வரும் இந்த வெற்றியாளார் தனது கருத்துக்களைத் திணிக்காமல் சாதிக்கத் தூண்டும் வாழ்க்கைச் சம்பவங்களோடும், குட்டிக் கதைகளோடும், கவிதைகளோடும் சிந்தனைகளைப் பதிய வைக்கும் விதத்தில் அமைந்த கட்டுரைகளின் எளிய நடையும், நேர்த்தியான புகைப்படங்களும் நூலுக்கு களம் சேர்க்கின்றன.

-    வாசகன் பதிப்பகத்தார்
பதிப்புரையில்

கல்வி, தடை, முயற்சி, உடற்குறை, சிக்கனம், நட்பு, சிகரத்தை எட்டுதல், உறவு, வெற்றி, சவால், நேசிப்பு, வார்த்தை போன்றா வாழ்வியல் முன்னேற்றச் சிந்தனைகள் அனைத்தையும் குறையொன்றுமில்லை… தொட்டிருக்கிறது.

குறிப்பாக, நம் நாட்டில் நம் ஊருக்கு அருகில் இருக்கும் கலைமாமணி எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய வரிகளைப் புரட்டிப் பார்க்கும் பொழுது, ‘உடற்குறைகளால் ஏற்படும் பலவீனத்தைக் கடக்க முயல வேண்டுமே தவிர, அதனுடைய இழப்பையே காரணமாகக் காட்டிக் கொண்டு, அவற்றிலிருந்து மீண்டு வந்து முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கக் கூடாது’ எனும் வரிகளைப் படிக்கும் ஒவ்வொரு இளைஞனும் தன்னை உணர்ந்து, இந்திய நாட்டின் மீதும் இச்சமுதாயத்தின் மீதும் அக்கறைக் கொண்டு செயலாற்ற உத்வேகம் பிறப்பிப்பதாக அமைந்திருக்கிறது.

-    Winner Dr. T. M. மோகன்
மாவட்டத் தலைவர்
மத்திய அரசின் திட்டக்குழு
நாமக்கல் மாவட்டம்
நூலின் அணிந்துரையில்

ஒரு செயலை மேற்கொண்டால் ஏற்படும் தோல்விகளைப் படிக்கட்டுகளாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, தடைக்கற்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற உன்னதமான சிந்தனையை தன் வாழ்வியல் கருத்தியலாகக் கொண்டு, சோதனைகளை சாதனைகளாக மாற்றி வரும் தாங்கள் மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

-    டாக்டர் பெ. வீரமணி
ஊனமுற்றோர் நலவாரிய முன்னாள் உறுப்பினர்
மாநில மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வு சங்க செய்தி தொடர்பாளர் மற்றும் பொருளாளர்
நிறுவனர் – இயக்குனர் அன்பகம் – மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி மற்றும் காப்பகம்)
நூலின் அணிந்துரையில்

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com

Tuesday, April 2, 2013

இளைய மனங்களில் நம்பிக்கை விதைத்து சாதனை மகுடம் சூடி பவனி வரத் தூண்டும் இதழ்…

ஏப்ரல் இதழ்






ஆண்டுக் கட்டணம்    - ரூ. 120
ஐந்தாண்டுக் கட்டணம் - ரூ. 600
புரவலர் நன்கொடை   - ரூ. 5,000

கவிஞர் ஏகலைவன்
ஆசிரியர் – நம்பிக்கை வாசல்
பதிப்பாசிரியர் -வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
kavignareagalaivan@gmail.com