Friday, April 5, 2013



நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

குறையொன்றுமில்லை…
வாழ்வியல் சிந்தனைத் தேரோட்டம்

சுயமுன்னேற்றக் கட்டுரைத் தொகுப்பு
கவிஞர் ஏகலைவன்

ISBN – 978-81-924351-9-0
120 பக்கங்கள்
விலை ரூ. 60 / -

பறக்கத் துடிக்கும் பறவைக்கு வானம் கூட தொட்டுவிடும் தூரம்தான் என்பதை இளைய சமுதாயத்துக்கு உணர்த்தும் நம்பிக்கை நட்சத்திரம் கவிஞர் ஏகலைவன் அவர்களின் சிறப்பான வாழ்வியல் சிந்தனைகளின் தொகுப்பு இந்நூல்.

செயலே சிறந்த சொல் என்பதை நிரூபித்து வரும் இந்த வெற்றியாளார் தனது கருத்துக்களைத் திணிக்காமல் சாதிக்கத் தூண்டும் வாழ்க்கைச் சம்பவங்களோடும், குட்டிக் கதைகளோடும், கவிதைகளோடும் சிந்தனைகளைப் பதிய வைக்கும் விதத்தில் அமைந்த கட்டுரைகளின் எளிய நடையும், நேர்த்தியான புகைப்படங்களும் நூலுக்கு களம் சேர்க்கின்றன.

-    வாசகன் பதிப்பகத்தார்
பதிப்புரையில்

கல்வி, தடை, முயற்சி, உடற்குறை, சிக்கனம், நட்பு, சிகரத்தை எட்டுதல், உறவு, வெற்றி, சவால், நேசிப்பு, வார்த்தை போன்றா வாழ்வியல் முன்னேற்றச் சிந்தனைகள் அனைத்தையும் குறையொன்றுமில்லை… தொட்டிருக்கிறது.

குறிப்பாக, நம் நாட்டில் நம் ஊருக்கு அருகில் இருக்கும் கலைமாமணி எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய வரிகளைப் புரட்டிப் பார்க்கும் பொழுது, ‘உடற்குறைகளால் ஏற்படும் பலவீனத்தைக் கடக்க முயல வேண்டுமே தவிர, அதனுடைய இழப்பையே காரணமாகக் காட்டிக் கொண்டு, அவற்றிலிருந்து மீண்டு வந்து முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கக் கூடாது’ எனும் வரிகளைப் படிக்கும் ஒவ்வொரு இளைஞனும் தன்னை உணர்ந்து, இந்திய நாட்டின் மீதும் இச்சமுதாயத்தின் மீதும் அக்கறைக் கொண்டு செயலாற்ற உத்வேகம் பிறப்பிப்பதாக அமைந்திருக்கிறது.

-    Winner Dr. T. M. மோகன்
மாவட்டத் தலைவர்
மத்திய அரசின் திட்டக்குழு
நாமக்கல் மாவட்டம்
நூலின் அணிந்துரையில்

ஒரு செயலை மேற்கொண்டால் ஏற்படும் தோல்விகளைப் படிக்கட்டுகளாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, தடைக்கற்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற உன்னதமான சிந்தனையை தன் வாழ்வியல் கருத்தியலாகக் கொண்டு, சோதனைகளை சாதனைகளாக மாற்றி வரும் தாங்கள் மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

-    டாக்டர் பெ. வீரமணி
ஊனமுற்றோர் நலவாரிய முன்னாள் உறுப்பினர்
மாநில மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வு சங்க செய்தி தொடர்பாளர் மற்றும் பொருளாளர்
நிறுவனர் – இயக்குனர் அன்பகம் – மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி மற்றும் காப்பகம்)
நூலின் அணிந்துரையில்

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com

No comments:

Post a Comment