Saturday, April 27, 2013


கவிஞர் ஏகலைவன் அவர்களின் “குறையொன்றுமில்லை” நூல் குறித்து சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் வாழ்த்து மடல்

அன்பு நண்பர் கவிஞர் ஏகலைவன் அவர்களுக்கு

இனிய வணக்கம்

தங்களுடைய சிந்தனைத் தொழிலகத்தின் புதிய படைப்பாகிய “குறையொன்றுமில்லை…” என்னும் வாழ்வியல் சிந்தனை தேரோட்டத்தின் ஊர்வலத்தில் சிறிது நேரம் வாசிப்பு உலா போனேன். அருமையான சிந்தனைத் துளிகளைத் தொகுத்தி சிகரம் தொடும் வழிகளை நடைமுறை சாத்தியத்தோடு கொடுத்துள்ளீர்கள்.

தாங்கள் சிந்திக்க எடுத்துக் கொண்ட தலைப்புகளாகிய “கல்விக்குக் கை கொடுப்போம்”, “சக உயிர்களை நேசிப்போம்”, “வாழ்ந்து பார்க்கலாம்”, “சிக்கனத்தில் உள்ள சுகம்” போன்றவை என்னை சிந்தனைக் கடலில் மூழ்கடித்து தெளிவு முத்துக்களை அள்ளித் தெளித்தன! பாராட்டுக்கள்!!

தொடர்ந்து சிந்தித்து இன்னும் நிறைய படைப்புகளைத் தருக! படைப்புலகம் மகிழட்டும்! வரும் தலைமுறை வாழ்ந்து சிறக்கட்டும்…!

அன்புடன்

சிந்தனைக் கவிஞர்
Dr. கவிதாசன் M.A., M.A., M.A., B.L., Ph.D.,
இயக்குனர்
ரூட்ஸ் நிறுவனங்கள்



No comments:

Post a Comment