Saturday, February 14, 2009

பொய்முகம் களைய...

ஓரடிவைக்க‌
ஒருயுகமாய்த் தோன்றும்.
இடையூறுகளை ஏற்க‌
இதயம் தருமாறும்.

கனவுகளை தள்ளீப்போட‌
ஆசையாய் மனம்
பரபரக்கும்.

நிஜங்களை
நினைக்காமலிருக்க‌
திரையரங்குகளை மனம் நாடும்.

தினம் தினம்
பொய்முகம் போர்த்தி,
இலட்சியத்தை இடைநிறுத்தி என‌
எண்ணற்ற குறைகள்
என்னுள்ளிருந்தாலும்,
என்னையும் கூட‌
ஒரு நல்ல முன்னோடியென‌
வைத்தியங்கும் ஓருலகம்.

என்பொருட்டு இயலாதெனினும்,
அவர்களுக்காகவேணும்
களைய வேண்டும்
என் குறைகளை !

No comments:

Post a Comment