Saturday, February 14, 2009

புதியன ஏற்று... ... ...

இளமையை இழந்தால்
அனுபவம் பெறலாம்.

பிரம்மச்சரியம் இழந்தால்
இல்லறம் பெறலாம்.

காமத்தை இழந்தால்
கண்ணியம் பெறலாம்.

எப்போதும்,
எதையேனும் இழந்து,
எதையேனும் பெறு !

பழையன் கழித்து,
புதியன் ஏற்று
ஓடிக்கொண்டேயிருக்கும்
நதியைப் போல !

No comments:

Post a Comment