Saturday, February 14, 2009

சுகதுக்கம்

ரோஜாவில்
முள்ளை உணருவதைவிட,
முள்ளின் மத்தியில்
ரோஜாவை காணக் கற்றுக்கொள்

காலணியில்லாமை குறித்து
கவலைப்படுவதைவிட,
காலேயில்லாதவனைக் கண்டு
திருப்தியுறக் கற்றுக் கொள்

ஏனெனில்,
சுகமொரு பக்கம்
துக்கமொரு பக்கம் என‌
இணைந்ததே
வாழ்க்கை நாணயம்.

No comments:

Post a Comment