Saturday, February 14, 2009

முகமறியாப் பொழுது...

நிழல்களை நேசிக்கும்
மனிதர்களுக்கு மத்தியில்
நிஜத்தை யாசிக்கும்
தொலைபேசித் தேவதையாய்
பரிச்சயமானாய் நீ

அந்தக்கணத்தில்
என் வாழ்வின்
அர்த்தத்தை தரிசித்த‌
நெகிழ்வு என்னுள்!

பிரபஞ்சத்தின்
சகல் எல்லைகளும்
நம் வார்த்தை விநியோகங்களில்
பரிமாறாப்பட்டன.

பலவேளைகளில்
வார்த்தைகள் தீர்ந்து போனபின்
மெல்லிய மெளனங்களும்
துணைகளாயின.

ஒரு
அந்திப் பொழுதில்
நீ விரும்பியபடி
நம் சந்திப்பும் நிகழ்ந்தது.

உன் விழிகளில்
அதிர்வின் பூகம்பம்.
அன்றோடு அறுப்பட்டது
நம் நட்பு.

எனதான‌
உடல் ஊனத்தை
உற்று நோக்கிய‌
உன் விழிகளுக்கு
புலப்படாமல் போனதெப்படி
ஊனப்படாத
என் உணர்வு.

No comments:

Post a Comment