Saturday, February 14, 2009

தொடரும் பயணம்

ஊர்முழுவதும்
அயர்ந்துறங்கும்
நடுநிசிப்பொழுதில்
யாருமற்ற தனிமை தேடி
நீளுகின்றன‌
என் கால்கள்

கடந்துபோகும்
பலகாதங்களுக்குப்பின்னும்
பயணிக்க வேண்டிய‌
நீள் தூரங்கள்
விழிகளில் விரிகின்றன‌

உடன்வந்த‌
காசுபணம், பெயர்புகழ்
குலகௌரவம், குடிப்பிறபு
என்கிற முகமூடிகளெல்லாம்
ஒன்றன் பின் ஒன்றாய்
கழன்றுகொள்ள‌
இன்னும் இன்னும் என‌
தேடிப்பயணிக்கின்றன‌
என் பாதங்கள் !

No comments:

Post a Comment