Saturday, February 14, 2009

எப்போதும் போலவே...

ந‌ம்
சந்திப்புகளின் போது,
வலிந்து பற்றி
சப்த வில்லெடுத்து
வார்த்தைக் கணைகளால்
என் மலரினும் மெல்லிய‌
மெளனத்தை சிதறடிக்கிறாய்

என் மெளானம்
பாதரசக்குமிழ்கள் போல‌
திசையெட்டும் சிதறி
உருண்டோடுவதையும்,
அவற்றை மேட்டெடுக்க‌
யத்தனிக்குமென் முயற்சிகளையும்
இமையொட்டாமல்
வேடிக்கை பார்க்கிறாய்

'நீ
சிதறடிக்கவும்,
வேடிக்கை பார்க்கவும்
நானும் என் மௌனமும்
காட்சிப் பொருள்களா?'
என்று வினவத்தூண்டும்
கடுங்கோபம்
நெஞ்சுக்குள் அலைமோதும்

எனினும்,
உன் புன்னைகைகளை
தொலைத்துவிட விருப்பமில்லாததால்
எப்போதும் போலவே
மௌனித்திருக்கிறேன்
நான்

No comments:

Post a Comment