Saturday, February 14, 2009

கடைசி நாள்

வரப்புகள் பிரிப்பதில்
தொடங்கின பூசல்
வாழ்க்கையின்
கடைசி நாள் வரைக்கும்
தீர்ந்த பாடில்லை.

பக்கத்து வீடுதான்
எனினும்,
பலகாதத் தொலைவு
மனங்களுக்குள்.

நெற்றியில் முடிச்சுவிழ,
கண்களைச் சுருக்கி
பார்த்த
ஏளனங்கலந்த‌
அருவெறுப்புப் பார்வைகளின்
பிடியிலிருந்து இன்னமும்
மீள மறுக்குது மனசு.

எனினும்,
என் சுயகௌரவத்தின்
செவிகளில் வேகத்தோடு
பளீரென்றறைகிறது
பக்கத்து வீட்டு
மரண ஓலம் !

No comments:

Post a Comment